அமைச்சர்கள் எவ்வாறு அரசாங்க
சொத்துக்களை கொள்ளையடிப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் அவர்களின் செயலாளர்கள் மற்றும் பிரதம கணக்காளர்களுக்கு தெரியாமல் திருட முடியாது என குறிப்பிட்டார்.
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் (CA Sri Lanka) 45ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், செயலாளர்கள் மற்றும் தலைமைக் கணக்காளர்கள் அமைச்சரின் முன்மாதிரியைப் பின்பற்றத் தொடங்குவதாகவும் இந்த நடைமுறை கீழ்மட்டத்துக்கு குறைகிறது என்றும் கூறினார்.

இதேவேளை, கோரப்படாத கொள்வனவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்துக் கொள்வனவு நடவடிக்கைகளும் அமைச்சின் செயலாளர்கள் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், தனது அரசாங்கத்தின் போது அனைத்துக் கொள்வனவுகளையும் மேற்பார்வையிடுவதற்காக தேசிய கொள்வனவு முகவர் நிலையம் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டார். நாட்டிலேயே மிகவும் நம்பகமான அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் ஊழல் செய்யவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் நீக்கப்பட்டனர் என்றார்.