லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட
மற்றும் தாஜுதீன் ஆகியோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், அவர்களைத் தவிர 7 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய கொலைகள் தொடர்பான விசாரணைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் கூறுகிறது.
தற்போது நடைபெற்று வரும் குற்ற விசாரணைகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க, மற்றும் பிரகீத் எக்னெலிகொட கொலைகள் அனைத்தையும் நாங்கள் நிச்சயமாக கையாளுகிறோம். பிரகீத் எக்னெலிகொட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வழக்கு நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்