முன்னாள் ஜனாதிபதியான

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.
 
ரணில் விக்கிரமசிங்க இந்த விசேட அறிக்கையை விடுத்து நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை பகிரங்கப்படுத்தவுள்ளார்.
 
ரணில் விக்கிரமசிங்க அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்துக்கு வருவதில்லை எனவும் தீர்மானித்து பொதுத்தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி வருகின்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி