மொட்டுக் கட்சியிருந்து வந்து தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது லன்சா கட்சியில் இணைந்துள்ளவர்களுக்கு, மொட்டுக் கட்சியின்

அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்துள்ளதாகக் கேட்கப்படுகிறது.

கேகாலையைச் சேர்ந்த இருவருக்கும், களப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்த தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக, அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அழைப்புகளின் மூலம், அவர்களிடமிருந்து ஒருயொரு கோரிக்கை மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் கலந்துரையாடலுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சியின் உயர் தரப்பிலிருந்தே, இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கவில்லை. எனவே, அவர்களை மீண்டும் பிரதான வீட்டிற்கு அழைத்து வருவதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருவதாகக் கேட்கப்படுகிறது.

அதாவது, ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சிபெற முயற்சிக்கின்றனர். அரசியல் அப்படித்தான். கட்சி அரசியலில் ஈடுபட்டுள்ள அனைவரும் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கின்றனர். அதிகாரத்துக்காகப் போராடுவார்கள். எனவே, எல்லா பக்கத்திலிருந்தும் நூல் விட ஆரம்பிப்பார்கள். அதில் தவறில்லை. ஏனென்றால், அதிகாரத்திற்காக ஜனநாயக வெளிக்குள் எந்த விளையாட்டையும் விளையாட யாருக்கும் உரிமை உண்டு.

யார் என்ன ஆட்டம் ஆடினாலும், இறுதியில் மக்கள் வாக்களித்துதான் தேர்வு செய்வார்கள். எனவே, மக்களே இன்னும் நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்கள் தங்கள் முக்கிய பங்கை புரிந்துகொள்கிறார்களா என்பதே கேள்வி. இந்தப் புரிதலின்மையையே, மக்களைத் தாக்கும் ஆயுதமாக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி