தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதத்தை இலங்கையின் 85 சதவீதமான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என 'வெரிட்டே ரிசர்ச்'

வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

வெரிட்டே ரிசேர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய 'தேசத்தின் மனநிலை' கருத்துக்கணிப்பின்படி, 2023 ஒக்டோபர் மாதத்தில் 9%ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம், 2024 பெப்ரவரியில் 7%ஆக குறைந்துள்ளது என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது அல்லது நல்ல நிலையில் உள்ளது என 9 சதவீதமானவர்கள் மட்டுமே மதிப்பிட்டதாகக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. இது 2023 ஒக்டோபரில் 16 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து வருவதாக 90% கருதுகின்றனர். அதேவேளை 2023 ஒக்டோபரில் 66% மட்டுமே இவ்வாறான எதிர்மறையான பார்வையைக் கொண்டிருந்தனர் என்று, அந்தக் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி