வழிவகைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழுவின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய குடியரசு

முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நுகர்வோர் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“இந்நாட்களில், நுகர்வோர் பெரிதும் சுரண்டப்படுகிறார்கள். இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றின் மூலம் வர்த்தகர்கள் சுமார் முன்னூறு சதவீதம் இலாபம் ஈட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இதனால், நுகர்வோர் அல்லது பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று, புதிய தலைவரான எம்.பி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வர்த்தகர்களின் அதிகப்படியான இலாபம் காரணமாக, சுங்கத் திணைக்களத்துக்கான வருவாய் இழப்பும் பதிவாகியுள்ளது என்றார்.

இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, நுகர்வோரைப் பாதுகாக்கும் விரிவான வேலைத்திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலுடன், வழிவகைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழு ஆரம்பிக்கப்படும் என, அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி