இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (27) மதுரைக்கு சென்றிருந்தார்.

பிரதமரை மதுரை ஆதீனம் வரவேற்றதுடன் அவருக்கு கௌரவம் அளித்திருந்தார்.

அதன்பின்னர் பிரதமர் மோடி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அங்கு செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கூறியதாவது,

“பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சதீவு மீட்க வேண்டும்இ இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

“அதேவேளை, 2024இல் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும் ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு” எனவும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி