கொடிய நோயுற்ற நாட்டை கட்டியெழுப்ப சிறந்த வைத்தியர் ரணில் விக்கிரமசிங்க என்றும், அதன்படி ஒக்டோபர் 14ஆம் திகதி இந்நாட்டில்

புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதிர்காலத்தில் ஒரு முறையாவது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் மக்கள் கசப்பு மருந்தை குடித்தாலும், தீவிர சிகிச்சையில் இருந்த நோயாளியை வார்ட் அறையில் வைத்து, மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு நோயாளியை அனுப்புவதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று ஹரின் பெர்னாண்டோ இங்கு கூறினார்.

நாட்டு மக்களுக்கு காணி உரிமை வழங்கும் உறுமய எனப்படும் இரண்டு மில்லியன் பத்திரங்களில் கையெழுத்திடும் தேசிய விழாவை எதிர்வரும் 5ஆம் திகதி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகியுள்ளார்.

ஹரீன் பெர்னாண்டோ நேற்று (03) நிகழ்ச்சியை அவதானிக்க வந்த போதே இதனைக் குறிப்பிட்டார்.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மீண்டும் விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தி, புதிதாக கட்டப்பட்ட மின் விளக்குகளை திறந்து வைப்பது, மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகத்தை திறந்து வைப்பது, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சுற்றுலாப் பகுதியாக மேம்படுத்துவது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை இந்த நிகழ்விற்கு கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் அதிகாரிகளை அழைத்துள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை சுமார் பன்னிரண்டாயிரம் காணி உறுதிகளை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு உறுமய என்று பெயரிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் மாகாண மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 மாதங்களாகிய மிகக் குறுகிய காலத்தில் நாடு மிகவும் கீழ் மட்டத்திற்கு வீழ்ந்திருந்தது, கடைசியாக சுற்றுலா பயணிகளும் நாட்டை விட்டும், வெளியேறத் தொடங்கிய தருணம், உலகமே அங்கீகரித்த ஒரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நான் உறுதியாகக் கூறுகிறேன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக முன்னிற்பார்.

நாட்டின் மூன்று வீதமான தேர்தல்களில் வெற்றிபெற்ற குழுக்களில் மேலும் 47 வீதமானவர்களைக் கண்டுபிடிப்பது கனவாகவே காணப்படுவதாகவும் அந்தக் கனவுகள் ஒருபோதும் நனவாகாது எனவும் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உலகின் ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என சுட்டிக்காட்டிய அவர், நோயாளி ஒருவர் இறக்கும் தருவாயில் இருக்கும் போது கசப்பு மருந்து கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் எனவும், மக்கள் தயக்கம் காட்டினாலும் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி நாட்டின் ஜனாதிபதியாக அவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி