சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கான பயிற்சி நடவடிக்கைகயில் ஈடுபட்டிருந்தபோது காயமடைந்த பெரஷூட் வீரர்களின் நிலை

கவலைக்கிடமாக இல்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.

இன்று (30) காலை, சுதந்திரதின ஒத்திகையில் கலந்துகொண்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர், பெரஷூட் ஒத்திகையின் போது, ​​தரையில் விழுந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் இரண்டு இராணுவ வீரர்களும் இரண்டு விமானப்படை வீரர்களுமே காயமடைந்தனர். அவர்களில் இருவர், கொழும்பில் உள்ள உயரமான கட்டிடத்தின் மேல் விழுந்து கிடப்பதை காணொளிகள் காட்டுகின்றன.

காற்றின் திசையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றமே விபத்துக்குக் காரணம் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

காயமடைந்த நான்கு வீரர்கள், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி