அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வுகளை வழங்குவதாகக் கூறி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மக்களை

அழைக்க முடியாது. ஒன்றாகப் பயணிப்பதன் மூலமே தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமென்றே அம்மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால், முப்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

“13ஐ தருகிறோம் என்று கூறி, வடக்கு மக்களுக்கு அழைப்புவிடுக்க முடியாது. ஃபெடரல் முறைத் தீர்வைத் தருகிறோம் என்று கூறியும் அவர்களை அழைக்க முடியாது. தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகளிலிருந்து மீளவேண்டுமாயின், நாம் ஒன்றாகப் பயணிக்க வேண்டுமென்று கூறியே அம்மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்” என்று, மாத்தறையில் இடம்பெற்ற முப்படை அதிகாரிகளுடனான மாநாடொன்றின் போது, அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஆட்சியாளர்கள் தேசிய ஒற்றுமையை உருவாக்கி, தேசம் ஒன்றுபட்டு நிற்கும் வரலாற்றை எழுதிய போது இந்நாட்டு மக்கள் முரண்பட்ட வரலாற்றை எழுத நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது, ​​தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க திரு.செல்வநாயகம் முன்வந்தார். 1956 முதல், மொழிப் பிரச்சினை எழுப்பப்பட்டது, 1958இல், சிங்கள மற்றும் தமிழ் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஸ்ரீ எழுத்துக்கு கிறீஸ் ஊற்ற ஆரம்பித்தார்கள். 1970ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், வடக்கில் ஒரு ஆயுத இயக்கம் தொடங்குகிறது. 2009 போர் முடிவடைந்தாலும், 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடங்கப்பட்டது. நமது ஆட்சியாளர்கள் மோதல் வரலாற்றை உருவாக்கினர், ஆனால் இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஒரு ஒற்றுமையை உருவாக்கினர். தேசம் ஒன்றாக நிற்கும் வரலாற்றை அவர்கள் எழுதும்போது, ​​நாம் முரண்பட்ட வரலாற்றை எழுதவேண்டி ஏற்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில் உலக நாடுகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அனுரகுமார திஸாநாயக்க, உலகின் நவீனத்துவத்திற்கு ஏற்ப இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்காக, வெறும் ஆட்சி மாற்றத்திற்குப் பதிலாக, நாட்டை மாற்றும் புதிய சகாப்தத்திற்கு இட்டுச் செல்லும் புதிய நிர்வாகம், அதற்காக, தேசம் மீண்டும் எழுச்சி பெற்று, தேசம் ஒற்றுமைக்கு செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

புதிய மறுமலர்ச்சி யுகத்துக்கான அதிகாரத்தை மக்கள் சக்தி கையில் எடுக்க வேண்டும் என்றும் அதன் பின்னரே பிரச்சினைக்கான தீர்வு ஆரம்பமாகுமே தவிர முடிவு அல்ல என்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி