லன்சா முகாமும் புத்தாண்டில் பணிகளை தொடங்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. புதிய

கூட்டணியின் முதலாவது மக்கள் அணிவகுப்பு இன்று (27), ஜாஎல நகர மத்தியில் நடத்துவதற்கு சகலமும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய புதிய கூட்டணியின் கம்பஹா மாவட்ட தலைவர் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ முனைப்பு காட்டுகிறார்.

இதற்காக கட்சியின் செயற்பாட்டு தலைமைப் பொறுப்பில் உள்ள அநுர பிரியதர்சன யாப்பா, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பியங்கர ஜயரத்ன மற்றும் நிமல் லன்சா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், நிமல் லான்சா மற்றும் எம்பிக்கள் குழு பிப்ரவரியில் புதிய கூட்டணியை தொடங்குவதற்கு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த நாட்களில் புதிய கூட்டணி, மற்ற கட்சிகளுடன் இணைவது மற்றும் புதிய கூட்டணியின் அரசியலமைப்பு தொடர்பான சட்ட விவகாரங்களில் செயல்படுவது தொடர்பான தகவல்கள், மூலை முடுக்கெங்கிலுமிருந்து கேட்கத் தொடங்கியிருக்கின்றன. தற்போது, ​​பல்வேறு கட்சிகள் மற்றும் பல முக்கிய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, கிட்டத்தட்ட 71 சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது புதிய கூட்டணியில் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான கட்சிகள் இணைந்துள்ளதாக லன்சா தரப்பின் ராஜகிரிய கட்சி அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார். அவர்களில் பல முஸ்லிம், தமிழ் கட்சிகள் இருப்பதாகவும் சிறிபால கூறுகிறார்.

அண்மையில், புதிய கூட்டணியின் ராஜகிரிய கட்சியின் தலைமையகத்தில் அனுர யாப்பா தலைமையிலான 20 சிறு கட்சிகள் மற்றும் குழுக்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அந்த குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 100 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் முற்போக்குக் கட்சி, மௌபிம அபிவிருத்தி முன்னணி, ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி, மட்டக்களப்பு மக்கள் ஒன்றியம், பொதுஜன ஐக்கிய உள்ளுராட்சிக் கட்சி, முல்லைத்தீவு சிவில் செயற்பாட்டுச் சங்கம் உள்ளிட்ட பல குழுக்கள் இதில் இணைந்துள்ளதாக புதிய கூட்டணியின் உள்ளக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், ராஜபக்ஷ முகாமுடன் இணைந்து செயல்பட்டால், இனி புதிய கூட்டணிக்கு ஆதரவு தரப்போவதில்லை என அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே குரலில் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த நம்பிக்கையை பாதுகாக்க முடியுமா என அனுர யாப்பா எம்பியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், எங்கள் அணியில் எவரும் மீண்டும் பெயர் பெறுவதற்கு உழைக்கவில்லை, நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை வெற்றி கொள்கிறோம்" என்று, அநுர யாப்பா உறுதியாக கூறினார்.

இதேவேளை, புதிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட செயற்குழு கூட்டம் அநுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்னவின் ஆனமடுவ இல்லத்தில் நடைபெற்றது.

இதற்காக, ஆனமடுவ பிரதேசத்தின் பிரதேச பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொண்டது. ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்ட இடத்தில் இனி ஒருபோதும் அரசியல் செய்ய மாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் பியங்கரா ஜெயரத்ன உறுதியளித்தார். அப்போது கூட்டம் பலமாக கைதட்ட ஆரம்பித்தது.

எவ்வாறாயினும், லன்சா மற்றும் அனுரயாப்பா ஆகியோரின் கூட்டணி, ராஜபக்சஷவுக்கு எதிரான கூட்டணி என்பதில் இனி எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் ரணிலையோ அல்லது சஜித்தையோ ஆதரிப்போம் என்று அவர்கள் எங்கும் கூறவில்லை.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி