இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி, இன்றைய தினத்தில் மட்டும் ஏற்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கை 4 ஆகும்.

இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5 அலகுகளாகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் திருமதி நில்மினி தல்தேனா தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 3 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் திருமதி நில்மினி தல்தேனா தெரிவித்தார். ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

எவ்வாறெனினும், இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன. கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web