இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடை விரைவில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த நாட்டில் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவது தொடர்பாக ஐசிசி அதிகாரிகளுடன் தொலைபேசியில் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக மேலும் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோ கூறியதாவது,

“ஐசிசியுடன் நான் விவாதித்துள்ளேன் என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும். எங்களின் தடையை விரைவில் நீக்குவோம் என்று தொலைபேசி உரையாடலின்போது தெரிவித்தனர். அவர்களிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதனால், இந்த வாரம் தடையை நீக்கப்பெறுவதற்கான திறன் எங்களுக்கு உள்ளது என்று நினைக்கிறேன்.

“ஷம்மி சில்வா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த நேரத்தில் ஐசிசியிடம் முன்வைப்பேன். ஐசிசியிடம் பணம் உள்ளது. அது இலங்கை அரசின் பணம் அல்ல. அதனால் எங்களுக்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. ஆனால் இந்த நாட்டில் நாம் கொண்டுவந்த ஒரு சட்டம் உள்ளது. அதுதான் ஊழல் தடுப்புச் சட்டம்” என்றார் அமைச்சர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி