2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (06) டெல்லியில்

நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி இலங்கை முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 279 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக Charith Asalanka அதிகூடிய ஓட்டங்களான 108 ஓட்டங்களை பெற்றார். இது Charith Asalanka சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற 2 ஆவது சதமாகும்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Tanzim Hasan Sakib, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் எஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது ஸ்டம்புக்கு வர மிகவும் தாமதமாகிவிட்டதால் 'Time Out' அறிவிப்புடன் Run out வீரராக அறிவிக்கப்பட்டு துரதிஷ்டவசமாக வெளியேறினார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இதுபோன்ற ஆட்டமிழப்பு இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி