தம்புத்தேகம, தேக்கவத்த பிரதேசத்தில் பூ வெடி பட்டாசு கொளுத்தச் சென்ற ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சியின் போது பட்டாசு ஒன்று வெடிக்காததால், மீண்டும் அதனை பற்றவைக்க முயன்றபோது, ​​பட்டாசு தீப்பிடித்து அவரது தலையில் பட்டதில் அவர் காயமடைந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த 31 வயதுடைய நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி