leader eng

“இரண்டு வீதிகள் இருக்கலாம். அதில் ஒரு வீதியில் காபட் போடப்பட்டுள்ளது, குழங்காமல் பயணிக்க முடியும், ஆனால் அந்த வீதியில் புலி உள்ளது  என்பதை நினைவில்

வைத்துக் கொள்ளுங்கள், அந்த வீதியில் நச்சுப் பாம்புகள் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களிடத்தில் அன்பாகக் கூறுவோம். இதனை நாம் வடக்கிற்குச் சென்ற போது நாம் கண்டோம். சற்று சிரமத்துடனாவது நச்சுப் பாம்பு பயமின்றி நேரான வீதியில் செல்ல, புலி பயமில்லாத வீதியில் செல்லவதற்கான வீதியைத் தெரிவு செய்ய” என கலகொடஅத்தே ஞானசார தேரர்  கூறினார். நேற்று (27) கேகாலை வட்டாராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பொதுபல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது உலகையே பீதிக்கு உள்ளாக்கும் அடிப்படை வாத கருத்தைக் கொண்டுள்ள தீவிரவாத குழுவை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் நல்லாட்சி அரசைக் கொண்டு வருவதற்கு உதவி செய்துள்ளதாகவும், இதனைப் பற்றி தான் அந்நாட்களில் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

நல்லாட்சியைக் கொண்டு வந்து அதன் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு ஒரே நாளில் முழு நாட்டினதும் பொருளாதாரத்தைச் சீர்குழைத்ததாகவும், தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்வதற்காக இஸ்லாமயி அடிப்படைவாத சக்திகள் பலவீனமான அரசாங்கத்தை தெரிவு செய்ததாகவும், அந்த பலவீனமான அரசாங்கம் தீவிரவாதிகளைப் போஷித்து அவர்கள் விரும்பியவாறு செயற்படுவதற்கு இடமளித்ததாகவும் அதன் இறுதி பெறுபேறாகவே 300க்கும் அதிகமான அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதாகவும் அவர் அங்கு கூறினார்.

2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்கு செயற்பட்ட குழுக்கள் தற்போதும் ஜனாதிபதி தேர்தலுக்கு உதவி வழங்கிக் கொண்டு இருப்பதாகவும் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்கும்? என்றும் ஞானசார தோர் கேள்வி எழுப்பினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி