பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மொட்டு கட்சி அலுவலகத்தில் இந்த முயற்சி இடம்பெற்றதுடன், மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தனது மொட்டு கட்சி உறுப்பினர்களையும் இதற்கு அழைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தனது மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உறுப்பினர்களையும் அழைத்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கையொப்பமிடப்பட்ட மனு இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகிப்பார் என நம்புவதாகவும் இதுவரை 50 கையொப்பங்கள் பெறப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மகிந்தவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு தாம் எதிர்ப்பு என அழைக்கப்பட்ட மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தமையினால், பஸில் ராஜபக்சவின் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும், அந்த அழைப்பை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டினால் தான் பதவி விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை நெலும் மாவத்தையில் உள்ள மொட்டு தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மனுவில் இதுவரை 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு ஆதரவான இந்த ஆவணத்தில் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி