பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர், ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நாளைய தினம் (10) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

முந்திய செய்திகள்,

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை இன்று (09) தீர்மானித்தது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஜூன் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊழல் மற்றும் மோசடி குற்றங்களில் தொடர்புடைய கைதி ஒருவரை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மொஹான் கருணாரத்ன கைது செய்யப்பட்டார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி