இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6 சதவீதம் பேர் தீவிரமாக புகைபிடிப்பதாகவும், 18 சதவீதம் பேர் தீவிரமாக
மது அருந்துவதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்துகிறது.
“இப்பழக்கங்களுக்கான பெரும்பாலான ஆரம்பப் புள்ளிகள், சமூகத்திலிருந்தே ஆரம்பித்திருக்கின்றன. சகாக்களின் அழுத்தங்கள் மற்றும் செல்வாக்கு போன்றன இதற்கு பெரும் காரணியாகியுள்ளன என்று, ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் புகையிலை துறையின் அனைத்து வகையான விளம்பரங்களும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களிடையே தங்கள் தயாரிப்புகளின் நேர்மறையான படத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன” என்று, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாக மது அருந்துதல் போக்கு சரிவையே காட்டுகிறது. 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு மொத்த மதுபான உற்பத்தியில் காணப்பட்ட சரிவு மற்றும் கலால் வரி வருவாயில் தொடர்ச்சியான அதிகரிப்பு, மதுபானப் பொருட்களின் மீதான உற்பத்தி வரிகளில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான அதிகரிப்புகளால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று. தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 36.5 சதவீதம் பேர் புகைபிடிப்பதை விட்டுவிட்டனர். மேலும், தற்போதைய புகைப்பிடிப்பவர்களில் 20.9 சதவீதம் பேர் கணக்கெடுப்பை நடத்தும் போது தங்கள் புகைபிடிப்பைக் குறைத்துள்ளனர். கருத்துக்கணிப்பை நடத்தும் போது, மேலும் 27.9 சதவீதம் பேர் மது அருந்துவதை நிறுத்துவதில் வெற்றி பெற்றனர்.
மத்திய வங்கி தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சிகரெட்டுகள் மீதான கலால் வரியில் 20 சதவீதம் அதிகரிப்பு, சிகரெட் கலால் வரி காரணமாக அரசாங்க வருவாயில் 7.7 பில்லியன் ரூபாய் அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளது. அதே நேரத்தில், சிகரெட் உற்பத்தி 521.5 (சிகரெட் அடிப்படையில்) மில்லியன் அளவால் குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 18 சதவீதம் குறைவாகும்.
அத்துடன், கல்வி நிறுவனங்களின் 100 மீற்றர் சுற்றளவில் புகையிலை விற்பனையைத் தடை செய்தல், NATA சட்டத்தை திறம்பட செயல்படுத்துதல், தற்காலிக மதுபான உரிமங்களை வழங்குவதை நிறுத்துதல் மற்றும் சுற்றுலாத் துறையின் சாக்குப்போக்கின் கீழ் மதுபான உரிமங்களை வழங்குவதை நிறுத்துதல் ஆகியவை எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று ADIC கூறுகிறது.