பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, 1986ஆம் ஆண்டு முதல் இன்று வரை, நாடு முழுவதிலுமுள்ள 213 தேயிலைத் தொழிற்சாலைகள்
மூடப்பட்டுள்ளதாக, பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டில் பதின்மூன்று தேயிலைத் தொழிற்சாலைகளும், 2019ஆம் ஆண்டில் பதினேழு தேயிலைத் தொழிற்சாலைகளும், 2020ஆம் ஆண்டில் பதின்மூன்று தேயிலைத் தொழிற்சாலைகளும், 2022ஆம் ஆண்டில் பதினான்கு தேயிலைத் தொழிற்சாலைகளும், 2023ஆம் ஆண்டில் பத்தொன்பது தொழிற்சாலைகளும், 2025ஆம் ஆண்டில் ஆறு தேயிலை தொழிற்சாலைகளும் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் இவை மூடப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், நிர்வாகப் பிழைகள், கொழுந்து போதாமை மற்றும் முந்தைய அரசாங்கங்களின் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் இந்த மூடல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் சில தொழிற்சாலைகள் அதிகபட்ச திறனில் இயங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் தேயிலைத் தொழில் நெருக்கடியில் இருப்பதாகவும், அதைக் காப்பாற்ற அமைச்சு தலையிட்டு வருவதாகவும் அவர் கூறினார். மூடப்பட்ட சில தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று நம்புவதாக அமைச்சர் கூறினார்.
மூடப்பட்ட தொழிற்சாலைகளை முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.