பொதுமக்களுக்கான கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட
24 மணிசேர சேவை, நாளைய (30ஆம் திகதி) தினத்துடன் நிறைவடையும் என்று, குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பத்தரமுல்லயில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு விநியோக சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி திங்கட்கிழமை முதல், காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை முன்னெடுக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.