பாணந்துறையில் இன்று (29) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், நாட்டில் இந்த வருடம் மாத்திரம் 50 துப்பாக்கிச் சூட்டு

சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாணந்துறை - வேகட பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நடந்துள்ளது.இதன்போது, காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பாணந்துறை, வேகட பகுதியில் முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

இன்று (29) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் குறித்த நபரின் முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் T-56 துப்பாக்கியால் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்துவதை CCTV காட்சிகள் காட்டுகின்றன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வௌிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நிலங்கவின் நெருங்கிய உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சமீப நாட்களாக, நிலங்க மற்றும் பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மாலமுல்ல மற்றும் மாதுபிட்டிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி