பல்கலைக்கழகங்களில் மனரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களை மீட்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று
ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உளவியலில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களை இணைத்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலைகள் மற்றும் ஏனைய பிரச்சினையான சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.