இலங்கையர்கள் சிகரெட்டுகளுக்காக, ஒரு நாளைக்கு 520 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 31இல் வரும், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார செலவுகள் 214 பில்லியன் ரூபாய்களாகும் என்று, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

2020 உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை கணக்கெடுப்பின்படி, இலங்கையில் தினமும் மொத்தம் 3.2 மில்லியன் மக்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன், இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 20,000 அகால மரணங்கள் ஏற்படுகின்றன.

முறையான வரி வசூலிக்கும் வழிமுறைகள் இல்லாததால், 2024 ஆம் ஆண்டில் சிகரெட்டுகளிலிருந்து அரசுக்கான வரி வருவாய் 9.4 பில்லியன் ரூபாய்களால் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, இது, உற்பத்தியாளருக்கு இலாபமாக மாற்றப்பட்டுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி