புதிய பாராளுமன்றத்தின்
சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ள நிலையில் முதலில் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் இன்று பிற்பகல் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், சுமார் 27 பேர் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது