நவம்பர் இறுதியில் தேர்தல்கள்
ஆணைக்குழு மீண்டும் கூடுகிறது.
இதன்படி, பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.