பாணந்துறை கடற்கரை துப்புரவு

பணியாளர் ஒருவரின் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
 
பொதுக்கழிப்பறை அருகே 3 பேர் வந்து, யாராவது வருகிறார்களா என பார்த்துக் கொண்டிருந்த போது, ​​மற்றைய 3 பேரும் அங்கிருந்த துப்புரவு பணியாளரை  பயமுறுத்தி அவர் வைத்திருந்த பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
 
இவர்களால் குறித்த பணியாளரிடமிருந்து  415 ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி