பொதுத் தேர்தலில் கொழும்பு
மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக உறுப்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தேசியப்பட்டியல் பதவி வழங்கப்படுவதாக மேலும் தெரியவந்துள்ளது.