களுத்துறை மாவட்ட சி. டபிள்யூ. டபிள்யூ.
கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணை பரீட்சைக்கான உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாதாரண பொதுப் பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான ஐந்து கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அமைச்சர் மட்டத்தில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சமூகத்தில் பேசப்பட்ட இந்த வினாத்தாள், சம்பந்தப்பட்ட பாடசாலையினாலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கும் தொடர்பில்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சு மட்டத்தில் நடத்தப்படும் முறையான விசாரணையின் பின்னர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்