முன்னாள் பிரதியமைச்சர் சாந்த
பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உறுதி செய்துள்ளது.
பெண் ஒருவருக்கு தொழில் வழங்குவதற்காக 50,000 ரூபா இலஞ்சம் கோரிய விவகாரத்தில் முன்னாள் பிரதியமைச்சர் குற்றவாளியாக காணப்பட்டார்.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி சாந்த பிரேமரத்ன முன்வைத்த மேன்முறையீட்டை நிராகரித்து, சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.