யாழ்ப்பாணம் - கற்கோவளம்
பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (51) அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (50) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இவர்களது வீட்டுக்கு இன்று (30) தினம் புதன்கிழமை காலை அயலவர்கள் சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.