விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (30) நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் BMW ரக கார் சந்தேகத்துக்கிடமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.
 
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பதிவு செய்யப்படாத BMW கார் இங்கிலாந்தில் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சர்வதேச பொலிஸ் தரவுகளின் படி சம்பந்தப்பட்ட BMW காரின் சேசி எண்ணை சோதனை செய்தபோது, ​​இது 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று வரைக்கும் (30) ​​விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டிருந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி