புதிய பொலிஸ் சேவையில்
இணைந்த உத்தியோகத்தர்கள் மூவரின் ஆடைகளைக் கழற்றிவிட்டு அவர்களைச் சித்திரவதை செய்ததாக கூறப்படும் திஸ்ஸமஹாராம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து இன்று 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம பொலிஸின் விடுதிப் பகுதியில் வைத்தே இவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
சந்தேகத்துக்குரிய கான்ஸ்டபிள் தமது எதிர்ப்பையும் மீறி தம்மக சித்திரவதை செய்ததாக சம்பவத்துக்கு முகங்கொடுத்த மூன்று புதிய கான்ஸ்டபிள்களும் தெரிவித்துள்ளனர்.