இலங்கை மத்திய வங்கி சுமார் நூறு
பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.
ஏலத்தின் மூலம் 36.1 பில்லியன் ரூபாயும் நாணய பிரீமியம் ஏலத்தின் மூலம் ஏழு நாட்களில் 70 பில்லியன் ரூபாயும் திரட்டப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, பல பணப்புழக்க கருவிகள் மூலம் உள்ளூர் சொத்துக்களுக்காக சுமார் 160 பில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் வங்கி அமைப்பில் சேர்க்கப்படும் கூடுதல் பணம் 190 பில்லியன் ரூபாய்களாக உயர்கிறது.
இது மத்திய வங்கியின் வழமையான திறந்த சந்தை செயற்பாடுகளுடன் ஒத்துப் போவதோடு அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடு செய்யாது.
மத்திய வங்கிச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு உரிய பணத்தை அரசாங்கம் அச்சிட முடியாது.