அரச ஊழியர்களின் சம்பளத்தை
அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுக்கவில் நேற்று (27) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்த போதிலும், திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் அனுமதியின்றி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.