கடந்த அரசாங்கங்களின்போது
இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் எந்தத் தரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு எதிராக உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு வருவதாக காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கம் தவறு செய்தால் அதற்கு எதிராக நிற்பேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.