எதிர்வரும் பொதுத் தேர்தலில்
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரித்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு வேட்பாளர் கே.எம். மஹிந்த சேனாநாயக்கவினால் இந்த மனு இன்று (25) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்