மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட
தொகுதியை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24) இரவு கிடைத்த தொலை பேசி அழைப்பையடுத்து அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று இரவு வந்ததையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு அறித்துள்ளார்
இதனையடுத்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணித்து வருகின்றனர்.