தவறான தகவல்களை சமர்ப்பித்து
இலங்கையில் கடவுச்சீட்டு பெற்று செல்லுபடியான வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த டயானா கமகேவுக்கு எதிராக குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நேற்று (24) ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், பிரதிவாதியின் சட்டத்தரணி சுகயீனமாக இருப்பதாக அறிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.