பிரதமர் ஹரினி அமரசூரிய

மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் உருவம் கொண்ட முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் தபால் திணைக்களம் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தனிப்பட்ட முத்திரைகள் உள்ளிட்ட இரண்டு நினைவுப் பரிசுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பரிசாக வழங்கப்பட்ட முத்திரைகள் தனிப்பட்ட முத்திரைகள் வகையைச் சேர்ந்தவை எனவும், எவரும் தமது சொந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்தி முத்திரைகளைத் தயாரிக்க முடியும் எனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தபால்துறை, பாரம்பரியமாக, சிறப்பு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட முத்திரைகளை நினைவுப் பரிசாக வழங்குவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த நிகழ்வை திரிபுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், இது வெறும் நினைவு பரிசு மட்டுமே எனவும் தபால் திணைக்களம் தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி