பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் கிடைத்ததோடு அதற்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வாக்களிப்பில் நடுநிலை வகித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்கெடுப்பிலிருந்து வெளியேறிருந்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்திருந்தமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், சட்டரீதியான சிக்கல்கள் உள்ளமையால் தான் நடுநிலை வகித்தாக குறிப்பிட்டுள்ளார்.