முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் தஹம் சிறிசேன ஆகியோர் இன்று (03)  தொழிலதிபர் திலீத் ஜயவீரவின மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்டனர்.

கொழும்பில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. 
 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தேசியப் பட்டியலில் இருந்து பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க, கேகாலை மாவட்ட மௌபிம ஜனதா கட்சியின் பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன, பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதேவேளை, பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளராக சமிந்து குமாரசிங்கவும், கண்டி மற்றும் உடுநுவர அமைப்பாளராக தக்க்ஷில பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஹேவாஹெட்ட அமைப்பாளராக சஞ்சீவ சுரவீர கண்டி யட்டிநுவர அமைப்பாளராக தக்க்ஷில செனவிரத்னவும் ரத்கம அமைப்பாளராக துசித திலங்க ஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி