leader eng

யாழ்ப்பாணம் அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது மேலும் ஆறு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்

காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

யாழ். நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணிகளின் போது, சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதியும் நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வில் 32ஆவது நாளாக நேற்றைய தினம் அகழ்வு நடைபெற்றது. இந்த அகழ்வு நடவடிக்கையில், மொத்தமாக 147மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 140 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம், செருப்புடன் புதைக்கப்பட்டிருந்த சடலத்தின் எலும்புக்கூடு மீட்க்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த அகழ்வுப்பணிகள் நேற்றுடன் இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

image.png


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி