leader eng

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும்

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான பொன்னம்பெருமகே தனுஷ் புத்திக என்ற  அங்கொட ஜீலேயின் பிரதான உதவியாளரை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பத்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

25 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 51 கிராம் கேரள கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 274,400 ரூபா மற்றும் டிஜிட்டல் தராசு என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான அங்கொட ஜீலே" என்ற தனுஷ் புத்திகவின் என்பவரின் சகா என்பது மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி