leader eng

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில்

நேற்று 28 ஆம் திகதி காலை திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்று மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், சந்தேகநபர் ஒருவரையும் மாவனல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்துககுச் சென்று அங்கிருந்த சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட போதும் சந்தேக நபரால் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
 
இதனையடுத்து, கண்டி வத்ததேகெதர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மேலும் அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும்  பொலிஸார் கூறுகின்றனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் காரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி