பொதுத் தேர்தலில் யானைச்

சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவுக்கு நேற்று (22) அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர், ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார், அங்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேட்புமனுக்களை தயாரிப்பதற்கு புதிதாக ஐந்து பேரை உள்வாங்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் அலசப்பட்டதுடன், யானை சின்னத்துடன் தோன்றாமை தேர்தல் வெற்றிக்கு தடையாக இருப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி