leader eng

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொத்துஹெர பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
 சட்டவிரோத மதுபானம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்துள்ள நபரிடம் அந்த தகவலை உள்ளடக்காமல் பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காகவே இந்த இலஞ்ச தொகை கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி பொத்துஹெர பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டிருந்த சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டார்.
 
சந்தேக நபர் பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி