leader eng

ஐக்கிய தேசியக் கட்சியின்

பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில்,

பாலித ரங்கே பண்டார தொடர்பில் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் சில பாரதூரமான விடயங்களை கருத்திற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் கட்சியின் செயலாளரை எந்த நேரத்திலும் நியமிக்கவும் நீக்கவும் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு அவர் கடமைகளுக்காக வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தவிர்ந்த ஏனையவர்களிடம் தேர்தல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்களை ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நேற்று (28) ஏற்பாடு செய்துள்ளார்.

பிரதிப் பொதுச் செயலாளர் கிரிஷாந்த தியோடர், சிறிகொத்த பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் ஆகியோரை 'சிறிகொத்த' கட்சியின் தலைமையகத்தில் தங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி