கொழும்பு, மருதானை தேவநம்பியதிஸ்ஸ

மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் வர்த்தகர் ஒருவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் 19 வயதுடைய வெலிமடை மாணவனே மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த 44 வயதுடையவரின் வசிப்பிடம் குறித்த குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் இஷாந்த குமார அபலகொடுவ தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி