மாணவியான சிறுமி ஒருவரை
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும் சம்பவத்தை மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவரும் மஹவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மஹவெல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபரும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
12 வயது சிறுமி, தான் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர்  ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த சிறுமி பாடசாலையின் பிரதி அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
 
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் யாரிடமும் கூற வேண்டாம் என பிரதி அதிபர் சிறுமியிடம் கூறியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான ஆசிரியர் மற்றும் 49 வயதான பிரதி அதிபர் ஆகியோர் மஹவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி